ஹம்பகா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இந்த ஊரடங்கு சட்டம் ஹம்பகா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதுநாள் வரையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக காணப்பட்ட பிரதேசங்களில் மட்டுமே ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையும் அநேக நாட்கள் ஊரடங்கில் இருந்த மாவட்டமாக கம்பஹா மாவட்டமே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
