20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான பாராளுமன்ற கூட்டுத் தொடரின் போது அவர் இதனை சமர்ப்பித்தார்.
இதன்படி பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், 4 விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நான்கு சரத்துகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
